News February 18, 2025

ஸ்ரீவைகுண்டம்: பாலியல் தொந்தரவு – ஆயுள் முழுவதும் சிறை!

image

ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் முருகன்(36). கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இவரை ஸ்ரீவை., அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், முருகன் தனது எஞ்சிய காலம் முழுவதும் சிறையில் இருக்கும்படி ஆயுள் கால சிறை வழங்கி தூத்துக்குடி போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News August 8, 2025

தூத்துக்குடி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

தூத்துக்குடி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFOவில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தூத்துக்குடியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News August 8, 2025

தூத்துக்குடி: இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க!

image

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் போல, அவ்வப்போது மினி வேலைவாய்ப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. வரும் ஆக. 14ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10க்கு முகாம் தொடங்க உள்ளது. சுமார் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்பு – 9677734590. வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 8, 2025

தூத்துக்குடியில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய கோவில்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது திருமூலநாதர் கோவில் எனப்படும் சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில் நவலிங்கபுர சிவ ஆலயங்களில் முதலாவது ஆலயமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிசயமாகும். மனநலம் இதய நோய் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பினி தீரும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!