News March 29, 2024

வேலூர் மாவட்டத்தில் 2641 நபர்களுக்கு தபால் வாக்கு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான  சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 11, 2025

வேலூர் மாவட்டத்தில் முதல்வர் திறந்து வைக்கிறார்

image

பொது நூலகத்துறை மூலம் குடியாத்தம், கே வி குப்பம், காட்பாடி ஆகிய வட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட கிளை நூலகங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று (ஏப்ரல்11) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி குடியாத்தம் புதுப்பேட்டை கிளை நூலக கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 292 பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

error: Content is protected !!