News March 21, 2024
வேலூர் அருகே போதை சாக்லேட் விற்பனை: 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போதை சாக்லேட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (மார்ச் 20) அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன் குமார் (21), மணீஷ் குமார் (21) இருவரும் போதை சாக்லெட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 20, 2025
வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் மகிமை

வேலூர் விரிஞ்சிபுரத்தில், 1,000 ஆண்டுகள் பழைமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, பெண்கள் கோயில் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஏப்ரல் 19) நடத்திய சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
News April 19, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 19) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.