News April 7, 2025
வேலூர் அங்கன்வாடி காலி பணியிடங்கள் கலெக்டர் அறிவிப்பு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 23-ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2025
லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப்பொறியாளர் கைது

குடியாத்தத்தில், செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஏப்ரல் 7) கைது செய்தனர். நிலுவைத்தொகையை வழங்க தனக்கு ரூ.30,000 தர வேண்டும் என அவர் கூறியுள்ளதாக லிங்கேஸ்வரன் என்பவர் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
News April 8, 2025
வேலூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பகுதிகளாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். *இரவில் வெளியே மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தேவைப்படும். கண்டிப்பாக பகிரவும்*
News April 8, 2025
வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய கலெக்டர்

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணி (43) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டார். இதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்தார்.