News March 29, 2025
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

தேனி பழனிசெட்டிபட்டி ஆசிரியர் காலனி ஆனந்தரூபன் 32. டிப்ளமோ இன்ஜினியர். இவர் எஸ்.பி.,சிவபிரசாத்திடம்அளித்த புகாரில், ‘தேனியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவன மேலாளர் குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.8.20 லட்சம் வாங்கினார். ஓராண்டு ஆன பின்பும் அனுப்பவில்லை.கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றினார் இது போல் நால்வரிடம் ரூ.22.85 லட்சம் மோசடி செய்துள்ளார்.
Similar News
News April 2, 2025
தேனி : இலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல்28 முதல்
(30 நாட்கள்) இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். இது குறித்து சந்தேகங்களுக்கு 94427 58363 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . சுய தொழில் தொடங்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 2, 2025
பெரியகுளம் : கர்ப்பத்தை கலைக்க கூறிய கணவர்

பெரியகுளத்தை சேர்ந்தவர் ஸ்வானிகா (25). இவரும் இவரது கணவர் கவின்பிரசாத்தும் துபாயில் பணி செய்து வந்தனர். அங்கு ஸ்வானிகா கர்ப்பமானர். கணவர் கவின்பிரசாத் கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளார். இதனால் ஸ்வானிகா பெரியகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது கவின்பிரசாதின் தாயார் கீதாராணி கருக்கலைப்பு மாத்திரையை உண்ண வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
News April 1, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது . வளிமண்டல கீழ் அடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தேனி உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று(ஏப்ரல்.1) இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல ஏப்ரல் மூன்றாம் தேதி தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.