News April 26, 2025

விஷக் கதண்டு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு!

image

சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News April 26, 2025

கரூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

image

▶️ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
▶️ வெண்ணெய்மலை முருகன் கோயில்
▶️ அரசு அருங்காட்சியகம், கரூர்
▶️ புகழிமலை, புகழூர்
▶️ பொன்னணியார் அணை
▶️ மாயனூர் கதவணை
▶️ அகஸ்தீஸ்வரர் கோயில், திருமுக்கூடலூர்
▶️ கடம்பவனேஸ்வரர் கோயில், குளித்தலை
கரூர் மக்களே SHARE பண்ணுங்க!

News April 26, 2025

கரூரில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் 

image

கரூர்: ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை கரூர் எல்லைமேடு வெற்றி விநாயக மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இதில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை உரிய ஆவணங்களுடன் தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 26, 2025

வீட்டிலிருந்த மகள் மாயம் தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகள் வடிவுக்கரசி 17. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்த வடிவுகரசி காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரின் தாயார் வசந்தா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை.

error: Content is protected !!