News March 19, 2025
விழுப்புரம் ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் பனமலை ஊராட்சியில் போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியதாக பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனே மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட தாசில்தார் உத்தரவிட்டு விசாரணை செய்து பார்த்ததில் அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த போலி சான்றிதழ் இன்று காலை ஆட்சியர் ரத்து செய்தார். ஆட்சியர் மேற்கொண்டு வரும் துரிதமான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News March 19, 2025
முன்னாள் எம்பி உதவியாளர் கொலை செஞ்சியில் விசாரணை

செஞ்சி, மறைந்த முன்னாள் எம்.பி குப்புசாமியின் உதவியாளர் குமார் கொலை வழக்கில் தாம்பரம் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் தலைமையில் செஞ்சி அடுத்த மேல் ஓலக்கூரில் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் ரவி என்பவர் குமாரை கடத்தி வந்து கொலை செய்து மேல் ஒலக்கூரில் புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவியுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு, குமார் உடலைத் தோண்டி விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 19, 2025
8th Pass போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க
News March 19, 2025
போக்சோ வழக்கில் ஒருவர் கைது

செஞ்சி அருகே வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துமனையில் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், காட்டு சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த வினித்குமார் (23, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிவந்தது. புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், வினித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.