News May 29, 2024
விருதுநகர்: சிறுவனை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சார்ந்தவர் மூர்த்தி. இவரது 17 வயது மகன் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த சிவா, k.முனீஸ்வரன், b.முனீஸ்வரன் உள்ளிட்ட 3 பேர் மது போதையில் சிறுவன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு மது பாட்டிலால் சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 21, 2025
விருதுநகர் தேர்தல் வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவு

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி விஜயபிரபாகரனும், தனக்கு எதிராக வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்க இன்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
News April 21, 2025
விருதுநகரில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு அதிகாரி, விற்பனை ஆலோசகர் உள்ளிட்ட சில பிரிவுகளில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 19- 35 வயதிற்குர்பட்ட இளங்கலை பட்டம் பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<
News April 21, 2025
பூக்குழியில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(41). இவர் அப்பகுதியில் ஏப்.17 அன்று நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.