News April 7, 2025

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்பு

image

அரியூரில் இருந்து ஊசூர் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று (ஏப்ரல் 6) அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். செந்தில்குமார் (35), விக்னேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News April 8, 2025

வேலூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பகுதிகளாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். *இரவில் வெளியே மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தேவைப்படும். கண்டிப்பாக பகிரவும்*

News April 8, 2025

வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய கலெக்டர்

image

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணி (43) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டார். இதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்தார்.

News April 7, 2025

வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!