News March 21, 2024

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் 15,09,906 ஆண், 15,71,093 பெண், 595 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டத்தில் 3077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனை தற்போது 3096 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 13, 2025

மாநில அளவில் 38வது இடம் பிடித்த கோவை மாணவி

image

தேசிய திறனாய்வு தேர்வு அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.28ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 27 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் இனிவரும் 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை பெற உள்ளனர். இதில் மாணவி வர்ஷா மாவட்டத்தில் முதல் இடத்தையும், மாநிலத்தில் 38வது இடத்தையும் பிடித்து சாதித்துள்ளார்.

News April 13, 2025

மருதமலை முருகன் கோயில்!

image

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க!

News April 13, 2025

மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நீதிமன்ற காவல்

image

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ், மூணாறு ரிசார்டில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து, போலீசார் விசாரணை போலீசார் மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். கைதான மத போதகர் ஜான் ஜெபராஜை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!