News March 23, 2024

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான வழக்கறிஞர் பாலு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வேட்பாளர் பாலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News

News April 9, 2025

நாவில் எச்சில் ஊற வைக்கும் ராணிப்பேட்டை மக்கன் பேடா

image

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரியமான உணவு வகை இருக்கும். எத்தனை தலைமுறை கடந்தாலும் அந்த உணவும் அதன் ருசியும் மாறவே மாறாது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கான் பேடா தான். மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்றும் பேடா என்றால் சர்க்கரை பாகில் ஊறவைக்கும் இனிப்பிற்கு பேடா என்று கூறப்படுகிறது. தந்தை பெரியார் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார். ஷேர் பண்ணுங்க மக்களே!

News April 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News April 8, 2025

மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் என்பதால் அந்நாளில் மட்டும் அரசு டாஸ்மாக் மது கடைகளை மூடி வைக்க வேண்டும். மதுக்கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்த மது கூடங்களையும் மூட வேண்டும். மீறினால் மதுக்கூடங்களின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!