News December 1, 2024
வாக்கிங் சென்றவர்கள் வேன் மோதி பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபயிற்சி சென்ற மூவர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையப்பன், நிர்மலா, செல்லம்மாள் என்ற மூவர் இன்று காலை சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமான வந்த ஆம்னி வேன் அவர்கள் மீது மோதியது. அதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News April 30, 2025
2026 ஆசிய போட்டிகளில் MMA, கிரிக்கெட் சேர்ப்பு!

2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் கலப்பு தற்காப்பு கலைகள் (MMA) போட்டி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட்டும் இந்த போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் செப். 19 முதல் அக்.4-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில், 15,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 30, 2025
முன்னாள் பாக். MP இந்தியாவில் இருக்க அனுமதி

ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் முன்னாள் பாக். MP தபயா ராம், இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 6 பேருக்கு மட்டுமே இந்திய குடியுரிமை உள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. பாகிஸ்தானில் மத அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக, அவர் கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார்.
News April 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 322 ▶குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. ▶பொருள்: இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.