News March 19, 2025
வளர்ப்பு பிராணிகளுக்காக மருத்துவமனை ஏற்படுத்தப்படும்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மண்டலம் 1,2,3, 4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய பத்து மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாடு மையங்களில் கூடுதலாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை வழங்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2025
சென்னை வாழ் பேருந்து பயணிகளுக்கு GOOD NEWS!

சென்னையில் இதுநாள் வரையில் சாதாரண மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்க மட்டுமே பயண அட்டைகள் இருந்ததன. ஆனால் இப்போது AC பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் புதிய ‘விருப்பம்போல் பயணிக்கும் பயண அட்டையை’ மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயண சலுகை அட்டையின் விலை ரூ.2000. பேருந்தில் பயணிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 19, 2025
சென்னையில் தீரா நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

சென்னை கே.கே நகரில் புகழ்பெற்ற ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ உள்ளது. பொதுவாக திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கே.கே நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 19, 2025
பேராசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியைக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.