News January 3, 2025

வந்தே பாரத் ரயில் அட்டவணையில் மாற்றமில்லை

image

திருப்பூர் வழியாக செல்லும் பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் இயக்கத்தில் மாற்றமில்லை, வழக்கம் போல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கோட்டத்துக்கு உட்பட்ட, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில், தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசூர் தண்டவாள பணி ஒத்திவைக்கப்பட்டு, வரும் 4, 5 &6ம் தேதி அட்டவணைப்படி இயங்கும் என கூறப்பட்டுள்ளது. 

Similar News

News August 5, 2025

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள்,<> https://startuptn.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 5, 2025

திருப்பூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (ஆக.6) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, கருவம்பாளையம், ஆலங்காடு, கல்லப்பாளையம், வெங்கடாசலபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், ராயபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி, கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News August 5, 2025

திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று இரவு பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு நேரில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்வதோடு, 100 எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!