News March 29, 2025

வதந்தியை நம்பி திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்

image

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி நடைபெறாது சனிக்கிழமை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் மற்றபடி சனிப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறாது என திருநள்ளாறு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நடப்பதாக வந்த வதந்தியை நம்பி திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் கூடி ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க SHARE செய்யவும்..

Similar News

News April 2, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

image

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

News April 2, 2025

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

image

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மேற்கொண்டு ஆய்வின் போது பாகூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் நேற்று புதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

News April 2, 2025

புதுச்சேரியில் 15 மதுக்கடைகளுக்கு சீல்

image

புதுச்சேரியில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்காதவர்களுக்கு கலால்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு கலால்துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் முதலியார்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 15 மதுக்கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.

error: Content is protected !!