News April 26, 2025

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

image

தென்காசி, சிவகிரி அருகே வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் 36. இவர் புளியங்குடியில் நிலம் வாங்கி வீடு கட்டினார். அதற்கு வரி நிர்ணயிப்பதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை அணுகினார்.அவர் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். தர விருப்பமில்லாத காளிராஜன் ,தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அகமது உமரை கைது செய்தனர்.

Similar News

News April 26, 2025

தென்காசி: குழந்தை வரம் தரும் கோயில்

image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் வில்வவனநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் வில்வவன நாதராகவும், பார்வதி நித்தியகல்யாணி அம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தல விருட்சம் வில்வமரம் ஆகும். திருமண வழிபாடு மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. *மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

News April 26, 2025

கடையம்: சாலையை சீரமைக்க ரூ.2 கோடியே 72 லட்சம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் கடையம் பேருந்து நிலையம் முதல் ராமநதி டேம் வரை சாலையானது சிதலமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று 2 கோடியே 72 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கும் மேலும் 1 கோடியே 58 லட்சம் மதிப்பில் மழையால் பாதிக்கப்பட்ட கரையை சீரமைக்கவும் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

News April 26, 2025

தென்காசியில் கால்நடை தடுப்பூசி முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின்கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 2025 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுபாடுமின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!