News March 19, 2024
ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News April 7, 2025
கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமி

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பால பகுதியில் கத்தியை காட்டி ஒருவர் அப்பகுதி மக்களிடம் பணம் பறித்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் போதை ஆசாமியை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.பின் மக்களே சேர்ந்து அவரை விரட்டினர். இதனால் அந்த பகுதில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் எதுவும் செய்யாமல் சென்றதால் பொதுமக்கள் போலீசார் மீதும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
News April 7, 2025
இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விபரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர் இன்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் . இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News April 6, 2025
பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.