News February 19, 2025

ராமேஸ்வரம் மீனவருக்கு ரூ.1.20 கோடி அபராதம்

image

தங்கச்சிமடம் ஜான் போஸ், சகாயம் ஆகியோரின் விசைப்படகுகளில் தொழிலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர் 14 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை பிப்.9ல் சிறை பிடித்தது. இந்த வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 12 மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்து, ஒருவருக்கு ரூ.1.20 கோடி அபராதம், மற்றொரு மீனவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News April 21, 2025

இராமநாதபுரம் பெண்கள் கவனத்திற்கு

image

இராமநாதபுரம்: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

image

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 21, 2025

700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

image

பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஜாமி ஆ மஸ்ஜித் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தற்போது திறக்கப்பட்டது. அங்கே நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர். மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை (ஜாமி ஆ மஸ்ஜித்) கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!