News May 20, 2024
ராமநாதபுரம் பாம்பன் பாலம் சிறப்பு!

இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலமாகவும், நாட்டின் பொறியியலின் ஒரு அதிசயமாகவும் விளங்குகிறது பாம்பன் பாலம். பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914 இல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கிமீ வரை நீண்டு, 143 தூண்களுடன் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.
Similar News
News April 21, 2025
இராமநாதபுரம் பெண்கள் கவனத்திற்கு

இராமநாதபுரம்: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 21, 2025
700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஜாமி ஆ மஸ்ஜித் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தற்போது திறக்கப்பட்டது. அங்கே நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர். மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை (ஜாமி ஆ மஸ்ஜித்) கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர் பண்ணுங்க