News April 5, 2024

ராமநாதபுரம்: நகையை மீட்ட போலீஸ்

image

சாயல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடம் நகைகளை திருடி செல்வதாக புகார் வந்தது. இதன்படி வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தனிப்படை அமைத்தார். தீவிர விசாரணையில் திருச்சி தெற்கு மலைக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரியை நேற்று கைதுசெய்து அவரிடமிருந்து 24 பவுன் நகைகளை மீட்டனர்.

Similar News

News April 18, 2025

ரூ.30 கோடி மதிப்பிலான ரிசார்ட்க்கு சீல்

image

கொல்கத்தாவை சேர்ந்த டிஎம் ட்ரேடர்ஸ், கேகே ட்ரேடர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி அன்னிய செலாவணி வணிகத்தில் ஈடுபடுவதாக ஏமாற்றி ரூ.270 கோடி மோசடி செய்தனர். வழக்கை விசாரித்த கொல்கத்தா ED அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ராமேஸ்வரத்தில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு கொல்கத்தா அமலாக்க பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ்.

News April 18, 2025

ராமநாதபுரம்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதி பலி

image

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!