News January 1, 2025

ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்தவர் கைது

image

தென்காசி ரயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக விநாயகம் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று நபரை பிடித்து விசாரித்தபோது தேவர் குளத்தை சேர்ந்த விஜய்(25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் ரயில் பயணிகளிடம் நகை செல்போன் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Similar News

News August 5, 2025

தென்காசி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஆகஸ்ட்.7-ல் விடுமுறை!

image

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வரும் ஆகஸ்ட்.7ம் தேதி வியாழன் அன்று நடைபெற இருப்பதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி, மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக (23.08.2025) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2025

தென்காசி மாவட்ட‌ காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

News August 4, 2025

தென்காசி: அரசு துறையில் வேலை

image

தென்காசி மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும். Share It.

error: Content is protected !!