News March 23, 2024
ரத்த வெள்ளத்தில் பலியான நண்பர்கள்

மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் 19 , ஸ்ரீதர் 20 ஆகிய இரு நண்பர்கள் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செக்கானூரணி அருகே அழகுசிறையில் வைத்து சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 14, 2025
போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற 20 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப். 20ல் மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும். 95666 59484 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். போலீஸில் சேர விரும்பும் உங்க நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு SHARE செய்து உதவவும்.
News April 13, 2025
மதுரையில் Vibe பண்ண இப்படி ஒரு இடமா.?

மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான் குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா விடுமுறை தினங்கள்ல இந்த பகுதிக்கு போனீங்கன்னா கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் தென்னை மரம், பனைமரம் போன்ற இயற்கை சார்ந்து இருக்கும்போது செம்ம வைஃப்-ஆ இருக்கும்.. Share It.
News April 13, 2025
மதுரை: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!