News March 26, 2025
மேட்டுப்பாளையம்: திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

மேட்டுப்பாளையம், தெவக்கரை புதூரை சேர்ந்தவர்கள் அர்ஜுனன்-ருக்குமணி தம்பதி. இவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தில், தனியார் தோட்டத்தில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஊருக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2.25 சவரன் தங்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு திருடு போனது தெரிந்தது. இப்புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 10, 2025
அதிமுகவின் முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகல்

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும், அதிமுகவின் அதிகாரப்பூர் நாளிதழான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான, இன்ஜினியர் சந்திரசேகர் இன்று தனிப்பட்ட பணி காரணமாக, தன்னை கட்சி பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2025
கோவை: கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️ கோவை கலெக்டர்- 0422-2301114, ▶️ காவல் ஆணையர்- 0422-2300250, ▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600, ▶️ மாநகராட்சி ஆணையாளர்- 0422-2390261, ▶️ மாவட்ட வருவாய்துறை அதிகாரி – 0422-2301171. இது போன்ற முக்கிய எண்களை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 10, 2025
தங்க தாலி போலவே மஞ்சள் தாலி

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ராஜா. இவர் விரலி மஞ்சலை பயன்படுத்தி தங்க தாலியை போன்றே வடிவமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.