News April 4, 2025

மூன்று அணிகளாக த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

image

வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடியில் த.வெ.க பொறுப்பாளர் அஜிதா தலைமையில் முதலில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அதே இடத்தில தவெக பிரமுகர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜ் அணியினரும், அதனையடுத்து முருகன் அணியினர் என மூன்று அணியினர் இன்று தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News

News April 5, 2025

தூத்துக்குடி : போக்சோ வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

image

ஆழ்வார் திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (22). இவர் 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆழ்வார் திருநகரி போலீசார் போக்சோ வழக்கு தொடர்ந்ததனர். இதில் இவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News April 5, 2025

தூத்துக்குடி: பிரபல நிறுவனத்தில் வேலை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு<<>> கிளிக் செய்து 30-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

ரவுடிகளை கண்காணிக்க எஸ்பி உத்தரவு

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று குற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை பற்றியும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருளகடத்தலை தடுப்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கவும் காவல்துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

error: Content is protected !!