News March 1, 2025
மூதாட்டிக்கு உதவிய அரசு ஊழியர் பலர் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரங்கம்பாடி தாலுகா பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு தனக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என கூறி விண்ணப்பம் செய்ய சென்று இருந்தார். அப்பொழுது அரசு அதிகாரி பாபு என்பவர் அவரை அழைத்து இ சேவை மையத்திற்கு சென்று ஆவணத்தை வைத்து பார்க்கும் பொழுது வங்கி கணக்கில் இருப்பு இருந்தது தெரிந்தது. அதனை ஆவணத்தின் அடிப்படையில் பெற்று வழங்கினார்.
Similar News
News April 19, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தங்கள் வாட்ஸ்அப்பிற்கு ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் 5ஜி நெட்வொர்க் என்ற பெயரில் ஏதேனும் APK கோப்பு வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. உறவினருக்காலுக்கும் ஷேர் செய்யுங்கள்
News April 19, 2025
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு உதவித்தொகை

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை விண்ணப்பிக்க மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று இலவச படிவத்தை பெற்று கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை மே 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News April 19, 2025
இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறையில் அனைத்து வகை கனிமங்களும் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைசீட்டுகளை இனிமேல் இணைய வழி வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள நடைசீட்டுக்கள் வழங்கும் முறை 30ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக குத்தகைதாரர்கள் நடைசீட்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.