News March 26, 2025
மாவட்டத்தில் நேற்றுடன் பிளஸ்டூ தேர்வுகள் நிறைவு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுடன் பிளஸ் டூ தேர்வுகள் நிறைவு பெற்றது. இதில் இயற்பியல் தேர்வில் 13,745 பேர் விண்ணப்பித்த நிலையில் 13,630 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 115 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதே போல் பொருளியல் தேர்வில் 7,289 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 7,140 பேர் மட்டுமே தேர்வு எழுதினார். 149 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
Similar News
News April 7, 2025
தாய் இறப்பு இல்லாத மாவட்டமாகும் விருதுநகர்

கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் பிரசவகால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2021- 22 இல் 1 லட்சம் பிரசவங்களில் 90 தாய்மார்கள் உயிரிழந்த நிலையில், 22 – 23 இல் 52 ஆகவும், 23- 24 இல் 45 ஆகவும் குறைந்துள்ளது. விருதுநகரில் 23 – 24 இல் 7991 பிரசவங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சாதனையாகும். நாட்டில் முதன்முறையாக விருதுநகர் தாய் இறப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
News April 7, 2025
விருதுநகர் அமைச்சர்கள் வழக்கில் நீதிபதி விலகல்

விருதுநகர் அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மற்றும் இவர்களது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அமைச்சர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2025
ஆண்டாள்,ரெங்கமன்னார் ஐந்தாம் நாள் காலை புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 5-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.