News March 26, 2025

மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், தாராபுரம், அவிநாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

Similar News

News April 7, 2025

திருப்பூரில் ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்

image

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதி குறவர் காலணியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள சூழ்நிலையில் அதனை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

News April 7, 2025

தீரா நோய் தீர்க்கும் வாழை தோட்டத்து அய்யன் !

image

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சோமனூரின் வாழை தோட்டத்து அய்யன் கோயிலின் கருவறைக்குள் எல்லோரும் செல்லலாம். இந்தக் கோயில் உள்ள புற்று மண்ணை எடுத்து வீடு, வயல் வெளியில் தெளித்தால் அங்கு பாம்புகள் வராது என்பது நம்பிக்கை. தீரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 7, 2025

கலெக்டர் அலுவலகத்தில் 673 மனுக்கள் குவிந்தது 

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்  கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 673 மனுக்களை அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதனை பரிந்துரை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!