News March 20, 2025

மாற்றுத்திறனாளி கல்லால் தாக்கி கொலை: 2 பேர் கைது 

image

இடைப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான அங்கமுத்து (45). இவர் கடந்த ஐந்தாம் தேதி இரவு டாஸ்மாக் பாரியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 இளைஞர்கள் அவரிடம் மது அருந்த பணம் கேட்டனர். அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அங்கமுத்துவை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, தன பிரபு, பேரரசு ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Similar News

News March 21, 2025

சேலத்தை கலக்கும் ‘குளுகுளு’ ஆட்டோ

image

சேலம் குரங்குசாவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி(74) . இவர் தனது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் சிறிய தண்ணீர் டேங்க், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் ஆகியவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். சேலத்தை கலக்கும் இந்த ஆட்டோ குறித்து உங்கள் கருத்து என்ன? 

News March 21, 2025

சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு

image

சேலம், கருப்பூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ.200 வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சுங்கச்சாவடி ஊழியர்கள் காரின் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் இருக்கைகளைக் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

News March 21, 2025

சேலம் மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இதற்கு மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். (Share பண்ணுங்க)

error: Content is protected !!