News March 25, 2025

மார்ச் 29 ம் தேதி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

image

கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே பிளஸ்-2 பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது EMIS எண் விவரத்தினை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News April 10, 2025

கரூருக்கு பெருமை சேர்த்த வீரர்

image

கரூர் மாவட்ட பாரா தடகள விளையாட்டு வீரர் ஜீவானந்தம் நடந்து முடிந்த பாரா தடகள  போட்டியிலும் மற்றும் பாரா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்  உயரிய ஊக்கத்தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கினார். கரூர் தடகளத்தில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

News April 10, 2025

கரூர்: மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவன்

image

புகழூரை அடுத்து தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த கொத்தனார் மணி (42) மனைவி தேனம்மாள் (40) இவா்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனா். இருவரும் வருகின்றனா். இதில் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மணி தகராறு செய்தாக வீட்டின் முன் கிடந்த கல்லை எடுத்து தேனம்மாள் தலையில் போட்டுள்ளார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்து நேற்று மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனா்

News April 10, 2025

கரூர்: விவசாயத்திற்கும், தொழிலுக்கும் இலவச கனிமம்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 28 நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மட்பாண்ட தொழிலுக்கும் தேவையான வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எவ்வித கட்டணமும் இன்றி வெட்டியெடுத்துச் செல்லலாம். இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் தங்களது அருகிலுள்ள இ-சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!