News September 14, 2024

மாமியாரை கொல்ல முயற்சி: 7 ஆண்டுகள் சிறை

image

சேலையூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(42) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு தனது மாமியார் கௌசல்யா என்பவரை கொலை முயற்சி செய்ததாக, சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி அசோக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து 45 நாட்களில் தீர்வு பெறலாம். ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

செங்கல்பட்டின் ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட்

image

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே உள்ளது குபேரகிரி மலை. மலைக்கு மேலே மகாகாளிங்கராய ஈஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் சிறிய சிவலிங்கம் மட்டும் உள்ள நிலையில், மலையின் உச்சியில் இருந்து அழகான காட்சியுடன் ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம் தரும் கோயிலாக இது உள்ளது. மக்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். ட்ரெக்கிங் போக நல்ல இடம். மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!