News April 3, 2025
மருதமலையில் இப்படி ஒரு ரகசியமா?

மருதமலை முருகனை தரிசிக்க பலமுறை நாம் சென்றிருப்போம். ஆனால் மலையேறும் வழியில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம், மலையில் 18ம் படியை கடந்தால் மலைச்சாரலில் 3 கற்கள் மாறுபட்ட நிறத்தில் இருக்கும். அந்த 3 கற்களும் 3 திருடர்களாம். மருதமலையில் உண்டியலை திருடி சென்றபோது, அவர்களை பிடித்த முருகன், ‘ நீவிர் கற்சிலைகளாக கடவீர்’ என சபித்தாராம். இதனால் அந்த திருடர்கள் சிலையானார்களாம். Share பண்ணுங்க.
Similar News
News April 14, 2025
கோவை: திருட்டை தடுக்க இத பண்ணுங்க!

கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!
News April 14, 2025
கோவை: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

தண்டுமாரியம்மன் கோயில் – உப்பிபாளையம். கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோவில் – மேட்டுப்பாளையம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்கநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
மாநில அளவில் 38வது இடம் பிடித்த கோவை மாணவி

தேசிய திறனாய்வு தேர்வு அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.28ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 27 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் இனிவரும் 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை பெற உள்ளனர். இதில் மாணவி வர்ஷா மாவட்டத்தில் முதல் இடத்தையும், மாநிலத்தில் 38வது இடத்தையும் பிடித்து சாதித்துள்ளார்.