News March 18, 2025
மனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

சீர்காழி அருகே திருப்புன்கூரை சேர்ந்த தேவி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செய்த அவரது கணவர் சிதம்பரத்தை சேர்ந்த சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்துள்ளார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து சரவணன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News April 11, 2025
மயிலாடுதுறையில் பார்க்க வேண்டிய கோயில்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 முக்கிய கோவில்கள்
1. வைத்தீஸ்வரன் கோயில்
2. சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
3. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
4. திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
5. சுவேதாரண்யேசுவரர் கோயில்
6. மயூரநாதசுவாமி கோயில்
7. பரிமளா ரங்கநாதர் கோவில்
8. வள்ளலார் கோயில் (திரு இந்தலூர் சிவன் கோயில்)
9. புனுகீஸ்வரர் கோயில்
10. திருமணஞ்சேரி கோயில், ஷேர் பண்ணுங்க
News April 11, 2025
விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் – ஆட்சியர்

விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி வரை குறைந்த வட்டியில் வழங்கப்படும் நிதியுதவி உதவியினை பெறலாம். மேலும் விபரங்களுக்கு https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அதோடு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5-வது தளத்தில் உள்ள துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) நேரில் சந்தித்தும் தெளிவான தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.