News April 15, 2025

மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

மதுரை, உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயி. நேற்று தோட்டத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சென்று பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அதே போல் பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் மலைசாமி. வீட்டில் கேபிள் டிவி வயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.மின்சாரம் சம்பந்தமான பொருட்களைக் கையாள்பவர்களுக்குத் தகுந்த உபகரணங்களுடன் செயல்பட SHARE செய்து அறிவுறுத்துங்க

Similar News

News April 18, 2025

மதுரை : நியோமேக்ஸின் ரூ.600 கோடி சொத்துக்கள் முடக்கம்

image

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த FIR அடிப்படையில் விசாரணையை துவங்கிய அமலாக்கத்துறை இன்று, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியோமேக்ஸின் சொத்துக்களை முடக்கியது.சென்னை மண்டல அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் உள்ள அசையும்-அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.

News April 18, 2025

மதுரையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 18) 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 18, 2025

மதுரை மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0452 –2546100
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்

error: Content is protected !!