News March 14, 2025

மணிக்கொல்லை: தொல்லியல் அகழ்வாய்வு தமிழக அரசு அறிவிப்பு

image

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மணிக்கொல்லையில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 30, 2025

அட்சய திருதியை: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர், இன்று அட்சயதிருதியை முன்னிட்டு செல்வம் பெருக வழிபட வேண்டிய கோயில்கள்: 1.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி, 2.திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட நாயகி, 3.சேந்திரக்கிள்ளை லட்சுமி குபேரர், 4.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள செங்கமல வல்லி தாயார், 5.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 30, 2025

கடலூரில் மதுபான கடைகளை மூட வேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு

image

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து FL-1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மதுபானக்கூடங்கள், FL-2 / FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்களை மூட வேண்டும். அதை மீறி கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

கடலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினம் (1.05.2025) அன்று காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி பொது நிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!