News March 30, 2025

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் நிலம் மீட்பு !

image

சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். இணை ஆணையர் பாரதி தலைமையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.

Similar News

News April 2, 2025

திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க.!

image

சிவகங்கை பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவகங்கையில் ஒரு கோயில் எழுப்பி அந்த கோயிலுக்கு சசிவர்ணேஸ்வரர் கோயில் என பெயர் சூட்டினார். இந்த கோயிலில் உள்ள துர்க்கையம்மன் இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில் காட்சி அளிக்கும். இந்த ஆலயத்தில் சுகப்பிரசவமாக, திருமணத் தடை நீங்க, மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு துர்க்கையம்மனிடம் வேண்டினால் அது நடக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

News April 2, 2025

அக்னி குண்டத்தில் நிலை தடுமாறி விழுந்த பக்தர்

image

சிவகங்கை மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு அருகேஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழாநடைபெற்றது. 6 மாத பெண் குழந்தையுடன் தீ மிதிக்க வந்த பக்தர் அக்னி குண்டத்தில் நடந்து செல்லும்போது தடுமாறி குழந்தையுடன் கீழே விழுந்தார். தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் விழுந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 2, 2025

சிவகங்கையில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் ரெடிமேட்ஸ் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர் காலிபணியிடங்கள் உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . அதேபோல இலவச உணவு மற்றும் தங்கும் இடம், ஊக்கத்தொகை, ESI , PF வசதிகளும் உள்ளது. <>இங்கு <<>>கிளிக் செய்து 31-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!