News August 7, 2024
மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

குத்தாலம் வட்டாரத்தில் கங்காதாரபுரம், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி, மாந்தை ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி ஸ்ரீகண்டபுரம் காரனுர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News August 9, 2025
மயிலாடுதுறை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
மயிலாடுதுறை: கலெக்டருக்கு சிலம்பம் சுற்றி காட்டிய சிறுவன்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முடி திருச்சம்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த சிலம்பம் விளையாடும் சிறுவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது சிலம்பு சுற்றி காண்பித்த சிறுவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
News August 9, 2025
241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.