News March 28, 2025

மகள்களுக்கு சொத்தில் முன்னுரிமை அளிக்கும் ஊர்

image

ராமநாதபுரம், திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூரில் மகள்களுக்கு முன்னுரிமை அளித்து சொத்து எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள பாகம்பிரியாள் அம்மன் என்கின்றனர்.அப்பகுதி மக்கள். விஷ கடிக்கு ஆளானவனர்கள் இக்கோயிலில் உள்ள வாசுகி தீர்த்ததில் குளிப்பதன் மூலம் குணமடைவார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இதனால் இந்த அம்மன் மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 2, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல்.01) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News April 1, 2025

செகந்திராபாத் – ராமநாதபுரம் வார ரயில் ஏப்.30 வரை நீட்டிப்பு

image

செகந்திராபாத் – ராமநாதபுரம் (வ.எண் 07695) வாராந்திர ரயில் சேவை புதன் கிழமைகளில் (விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி) வழியாக நாளை (ஏப்.02) முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில் வெள்ளிக்கிழமைகளில் (வ.எண் 07696) ஏப்.4 முதல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2025

பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை  

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!