News April 17, 2025

போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

image

திருவள்ளூா் டோல்கேட் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில், போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த பைக்கை சோதனை செய்ய போலீசார் மறித்தனா். பைக்கை விட்டு இறங்கி வந்த இளைஞா், போலீசாரை தகாத வாா்த்தை பேசியதோடு, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

Similar News

News April 19, 2025

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆர்.கே. பேட்டை-044-27845709, ஆவடி-044-26850313, திருவள்ளூர்-044-27660254, பூவிருந்தவல்லி- 044-26274314, ஊத்துக்கோட்டை-044-27630262, கும்மிடிப்பூண்டி-044-27921491, பொன்னேரி-044-27972252, திருத்தணி-044-27885222, பள்ளிப்பட்டு-044-27843231. *மிக முக்கிய நம்பர்களான இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 19, 2025

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

image

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

image

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 682 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!