News April 15, 2025
பைக் விபத்து: சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சென்னை சாலிகிராமத்தில் கடந்த 11ஆம் தேதி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயார் ஜாமினில் விடுவிப்பு. விபத்தில் படுகாயம் அடைந்த 76 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.7) சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, அடையார், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<
News August 6, 2025
போராட்ட களத்தில் சின்மயி

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்தும், நிரந்தர வேலை கோரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையின் வெளியே கடந்த ஆக.1-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பின்னணி பாடகி சின்மயி இன்று நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
News August 6, 2025
சென்னை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டுமையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10th தோல்வி, தேர்ச்சி, 12th, பட்டயப்படிப்பு முடித்து பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் என்றார். (SHARE )