News April 24, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT
Similar News
News August 11, 2025
பெரம்பலூரில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதில், 1-5 வயதுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடியிலும், 6-19 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளி கல்லூரியிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாதவர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் வீடுவீடாக சென்று வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அவர்.
News August 10, 2025
விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்; எஸ்பி ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் நாளை(ஆக.11) விசிகா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டமானது விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தலைமையில், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அதற்கான இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆய்வு செய்தனர்.
News August 10, 2025
பெரம்பலூர் மக்களே உஷார்! இதை தெரிஞ்சிக்கோங்க!

பெரம்பலூர் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்