News May 1, 2024

பென்னாகரம் அருகே பேருந்து ஏறி விவசாயி பலி

image

பென்னாகரம் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று(ஏப்.30) மாலை தன பைக்கில் வண்ணாத்திப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டு, பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும். ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

தருமபுரி: போதைப் பொருள் புகார் எண்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 29, 2025

தர்மபுரியில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

தர்மபுரி அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன். இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து நாளை(ஏப்.30) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!