News March 30, 2025
பெண் டாக்டர் வீட்டில் நகை திருட்டு

பெரியகுளம் தென்கரை தண்டுப்பாளையம் மெயின்ரோட்டைச் சேர்ந்த முகமது ஜாபர் சாதிக் மனைவி ஆசியா 65.
இவர் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்னாள் நிலைய மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவர். இவர்களது மகளை கொடைக்கானலில் விட்டு வீடு திரும்பினர். வீட்டின் அலமாரி பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 10 கிராம் ஒரு ஜோடி தங்கத்தோடு, ரூ.2 ஆயிரம் திருடு போனது. போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News April 3, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 02.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 2, 2025
சிறப்பு வாய்ந்த குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு அமைந்துள்ள கோயில்தான் குச்சனூர் கிராமத்தில் உள்ள இந்த சனீஸ்வரன் ஆலயம். ஏழரை சனியால் ஏழேழு ஜென்மத்திலும் கஷ்டம் என்பார்கள். சனி தோஷம் உள்ளவர்கள், இந்த கோயிலில் பிரத்தியேகமாக வழிபாடு செய்வது வழக்கம். சனிக்கிழமை தோறும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெகும், தோஷங்கள் நீங்கும். சனிப்பெயர்ச்சி உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 2, 2025
தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.