News March 25, 2025
புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா?: முதல்வா் விளக்கம்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பேரவையில் கேட்கப்பட்டதற்கு, முதல்வா் விளக்கம் அளித்தாா். புதுவை உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பரிந்துரைக்க, நீதிபதி சசிதரன் ஆணையத்தை அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஆணையம் பரிந்துரையை அளித்த பின், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
Similar News
News March 29, 2025
தொலைதூர படிப்புகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் அர்விந்த் குப்தா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஏதேனும் விளக்கங்களுக்கு, உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
News March 29, 2025
சிறுவர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி இளைஞர் அமைதி மையம் நிறுவனர் அரிமதி இளம்பரிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு அரிமதி தென்னகன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை வரும் 15ஆம் தேதிக்குள் இளைஞர் அமைதி மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
News March 29, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளைஞர்களை குறி வைத்து, நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படம் பார்த்து உள்ளீர்கள் அல்லது பதிவிறக்கம் (download) செய்துள்ளீர்கள் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள், என கூறி மிரட்டினால் நம்ப வேண்டாம் என புதுவை காவல்துறை எச்சரித்துள்ளனர். உடனே நண்பர்களுக்கும் Share பண்ணீடுங்க.. Share It