News April 24, 2024

புதுவை படகு குழாமில் பனானா ரைடர் வெள்ளோட்டம்

image

புதுவையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகு வாங்கப்பட்டு அது இயக்கப்படாமல் இருந்தது. மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம் எனக் கூறினர்.

Similar News

News April 20, 2025

புதுவை: வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

image

வில்லியனூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தரராஜன். இவர், குடிப்பழக்கம் உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று காலை அதே பகுதி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

புதுவை: கோடை விடுமுறைக்கு ஏற்ற இடம்

image

புதுவையில் ஊசுட்டேரி கிராமத்தில் பழங்குடி இன தாவரங்கள் விலங்குகள் என இயற்கையின் பாரம்பரியத்துடன் இருப்பதுதான் ஊசுட்டேரி சதுப்புநிலம். இங்கு பசுமையான சூழலில் வியக்கும் அழகோடு இந்த ஏரியில் படகு சவாரி செய்தும். இயற்கையின் அழகியலை புகைப்படங்களாக பதிவு செய்யவும் இந்த கோடை விடுமுறையில் மக்கள் வருகின்றனர். 390 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நம்மை நிச்சயம் இயற்கையின் அழகில் திகைக்க வைக்கும். SHARE IT.

News April 19, 2025

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு ஈ மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!