News April 1, 2025
புதுச்செரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News April 8, 2025
அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

மணவெளி தொகுதியில், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ.51.56 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர். அதற்கான பணிகளை விரைந்து முடிக்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.
News April 8, 2025
புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு எண்கள்

புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் -1077, குழந்தைகள் உதவி எண் -1098, பெண்கள் உதவி எண் – 1091, குற்றங்களை தடுப்பவர் – 1090, மீட்பு மற்றும் நிவாரண ஆணையர் -1070, சாலை விபத்து – 1073, அவசர ஊர்தி – 102,108, தீயணைப்பு – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியபடுத்தவும்.
News April 8, 2025
புதுச்சேரியில் மதுக்கடைகள் இயங்காது

புதுச்சேரி கலால்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி சாராயம் கள் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும் இயங்க கூடாது என கலால் துறை ஆணையர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.