News February 6, 2025

புதுக்கோட்டை: தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

image

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த பழனிவேலு (30) என்பவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணேஷ்நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல தற்கொலை எண்ணம் தொன்றினால் 104 என்ற தற்கொலை தடுப்பு மைய எண்ணிற்கு அழைக்கவும்.

Similar News

News April 20, 2025

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

புதுக்கோட்டை மக்களே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்: ▶துணை கண்காணிப்பாளர் அறந்தாங்கி – 9498100739, ▶துணை கண்காணிப்பாளர் ஆலங்குடி – 9498100764, ▶துணை கண்காணிப்பாளர் புதுக்கோட்டை – 9498100731, ▶துணை கண்காணிப்பாளர் பொன்னமராவதி – 9498100755, ▶துணை கண்காணிப்பாளர் கோட்டைப்பட்டினம்- 9498100774, ▶துணை கண்காணிப்பாளர் கீரனூர் – 9498100746. மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..

News April 20, 2025

அன்னவாசல் அருகே 4 சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து நாசம்

image

அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2025

கொடும்பாளூர்: அகழாய்வில் கிடைத்த பழமையான பொருட்கள்

image

புதுக்கோட்டை கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலன்கள், 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள், பாசி மணிகள், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

error: Content is protected !!