News March 20, 2025
புதிய தேரோட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் புதிய தேரோட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள், தேரோட்டம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும், அரசாணையினைப் பின்பற்றவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
Similar News
News March 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.28 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 28, 2025
சேலத்தில் கால்பந்து மைதானம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

ரூபாய் 25 கோடியில் சர்வதேச தரத்தில் 8 தடங்கள் கொண்ட செயற்கை தடகள ஓடுபாதையுடன் இயற்கை கால்பந்து புல்வெளி மைதானம் சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் நீர்த்தெளிப்பான் வசதி, பாதுகாப்பு வேலி, தடகள மற்றும் கால்பந்து உபகரணங்கள், நீளம் தாண்டுதல் குழி மற்றும் பிற தேவையான வசதிகள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
News March 28, 2025
145 துணை பிடிஒ இடம் மாற்றம்- ஆட்சியர் உத்தரவு பரபரப்பு

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் பணிபுரிந்து வரும் 145 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தாரமங்கலத்தில் இருந்த வசந்தா நங்கவள்ளி ஒன்றியத்திற்கும், ஏற்காட்டில் இருந்த மணிகண்டன் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கும், சேலத்தில் இருந்த அமுதா தாரமங்கலத்திற்கும், மேச்சேரியில் இருந்த சரவணன் காடையாம்பட்டிக்கும் என 145 பேர் மாற்றம்.