News April 24, 2025
பில்லி, சூனியம் நீக்கும் மார்க்கபந்தீஸ்வரர்

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரத்தில் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் ‘விரிஞ்சிபுரம்’ என்றானது. கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இங்கு உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.
Similar News
News April 24, 2025
வேலூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் மே 2-ந் தேதி காட்பாடி விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது. 16 முதல் 25 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலாளர் கட்டாயம் தேவை. வயது சான்றிதழும், கல்வி நிறுவன சான்றிதழும் தேவை. போட்டி போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.
News April 24, 2025
வேலூரில் நாளை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 24, 2025
ரவுடி நாகேந்திரன் மீண்டும் வேலூர் சிறையில் அடைப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நாகேந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.