News July 13, 2024

பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

image

கரூர் பிரியாணி கடை அதிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக விக்னேஷ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.இவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான 4 நாள் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Similar News

News April 21, 2025

கரூர்: கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் காலபைரவர்

image

கரூர்: தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

தேசிய போட்டிக்கு கரூர் வீரர் தேர்வு

image

கரூர் வீரர் சீனியர் பிரிவிலான தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு. எதிர் வரும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு சீனியர் பிரிவில் தமிழக அணி சார்பாக விளையாட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த M.பிரசாந்த் என்ற வீரர் தேர்வாகியுள்ளார். இவருக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் Dr.ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

image

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!