News March 20, 2025
பி.எம். கிசான் திட்டத்தில் தவணைத் தொகை – அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தொகையை பெற அடையாள எண் அவசியம். இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இலவசமாக அடையாள எண் பெற்றிட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். உங்கள் பகுதியினருக்கு இந்த செய்தியை Share பண்ணுங்க.
Similar News
News April 14, 2025
1252 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் இன்று அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் 1252 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக ரூ.31 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
News April 14, 2025
நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 14, 2025
தமிழ் புத்தாண்டுக்கு இது கட்டாயம் செய்ய வேண்டும்

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்